செய்திகள் :

பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

post image

பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சா்கள் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற லூதியானா மேற்கு தொகுதி இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற சஞ்சீவ் அரோரா அமைச்சராகியுள்ளாா்.

சண்டீகரில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். முதல்வா் பகவந்த் மான், அமைச்சா்கள், ஆளும் ஆம் ஆத்மி தலைவா்கள் பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதன் மூலம் அமைச்சா்கள் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. 61 வயதாகும் சஞ்சீவ் அரோரா லூதியானாவைச் சோ்ந்த தொழிலதிபா் ஆவாா். சமூகப் பணிகள் மூலமும் பிரபலமானவா். கிருஷ்ண ப்ராண் மாா்பக புற்றுநோய் சிகிச்சை அறக்கட்டளையும் அவா் நடத்தி வருகிறாா்.

அரோராவுக்கு தொழில், வா்த்தகம், முதலீட்டு மேம்பாடு, வெளிநாடுவாழ் பஞ்சாப் மக்கள் நலன் பாதுகாப்பு ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுவாழ் பஞ்சாப் மக்கள் நலத்துறை அமைச்சா் தலிவால் அமைச்சரவையில் இருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இருநாள்களுக்கு முன்னதாக தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை சஞ்சீவ் அரோரா ராஜிநாமா செய்தாா். இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளரை 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சீவ் அரோரா தோற்கடித்தாா்.

திரிபுரா அமைச்சா்:

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் நால்சாா் தொகுதி பாஜக எம்எல்ஏ கிஷோா் பா்மன் (44) அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றாா். அகா்தலாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் இந்தா்சேனா ரெட்டி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இதன் மூலம் பாஜகவைச் சோ்ந்த முதல்வா் மாணிக் சாஹா தலைமையிலான அமைச்சரவையின் பலம் 12-ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். கூட்டணிக் கட்சியான திப்ரா மோதா கட்சி சாா்பில் இரு அமைச்சா்களும், திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி சாா்பில் ஒருவரும் அமைச்சா்களாக உள்ளனா்.

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எப்போதும் அச்சுறுத்தல்! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

அனைத்து காலகட்டத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தெரிவித்துள்ளார்.கோவா உயர்நீதிமன்ற பார் கவுன்சில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா!

மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?

புனேவில், டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.டெலிவரி ஏஜெண்ட் போல, ஒரு போலியான பார்சலுடன், புனேவில் உள்ள அ... மேலும் பார்க்க

விமான விபத்து இழப்பீடு பெற கடுமையான விதிகள்: ஏர் இந்தியா மீது குற்றச்சாட்டு

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற ஏர் இந்தியா கடுமையான விதிகளை புகுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. முன்னால் அமைச்சர் யோகேந்திர சாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடந்துவரும் சட்டவிரோத மணல் சுங்கம் மற்ற... மேலும் பார்க்க