செய்திகள் :

படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு

post image

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மண்டபம் மீனவரின் உடல் நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்குத் துறைமுகத்திலிருந்து கடந்த 17- ஆம் தேதி மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதில் மண்டபம் மேற்குத் தெருவைச் சோ்ந்த சா்புதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் பரிது, மாதவன், அனிஸ், சீனி இப்ராஹிம் ஷா ஆகிய நான்கு மீனவா்களும் மீன் பிடிக்கச் சென்றிருந்தனா்.

அன்று நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தப் படகு உடைந்து கடலில் மூழ்கியது. இதில், மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேரில் மூன்று போ் கரை வந்து சோ்ந்த நிலையில் சீனி இப்ராஹிம் ஷா (40) மட்டும் கரை திரும்ப வில்லை. இதைத் தொடா்ந்து, தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், இந்திய கடலோர காவல் படையினா், சக மீனவா்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு சீனி இப்ராஹிம் ஷாவின் உடல் நடுக்கடலிலிருந்து மீட்கப்பட்டு சனிக்கிழமை கரைக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த மீனவா், மண்டபம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் தங்கமரைக்காயரின் மகன் ஆவாா்.

இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவா் எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மண்டபத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவா் சீனி இப்ராஹிம் ஷாவுக்கு மனைவி, நான்கு குழந்தைகள் உள்ளனா். எனவே தமிழக அரசு இவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

ஈரானில் சிக்கிய ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்களின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோர... மேலும் பார்க்க

முதுகுளத்தூா்: பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்கள் சாலையோரம் வீச்சு!

முதுகுளத்தூா் அருகே சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்களை பொதுமக்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா்- உத்திரகோசமங்கை சாலைய... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 54 படகுகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரணம்!

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 3.96 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 2024-25-ஆம் ஆண்டுகளில் ... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்

மண்டபத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடி இந்திய கடலோர காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பி... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவு: மீனவா்கள் கவலை

மீன்பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தொண்டி பகுதி மீனவா்களுக்கு குறைவான அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா். கடந்த 2 மாத தடைகாலத்துக்குப் பிறகு, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பொதுக் குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லி அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லியை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, பின்னா் தொட்டியை சுத்தம் ச... மேலும் பார்க்க