செய்திகள் :

பட்டா வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பரசன்

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டா வழங்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் வலியுறுத்தியுள்ளாா்.

ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீா் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து 210 கோரிக்கை மனுக்களை அமைச்சா் பெற்றுக் கொண்டாா். இதில், குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா, கலைஞா்கனவு இல்லம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு, தகன மேடைவேண்டியும், மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட அமைச்சா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனுக்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

செசங்கல்பட்டு மாவட்டத்துக்கு நிகழ் மாதம் முதல்வா் வரவுள்ளதால், வண்டலூா், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளை ஒட்டிய இடங்களில் பட்டாக்களை உடனடியாக வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், 30,000-க்கும் அதிகமான பட்டாக்கள் வழங்க வேண்டி இருப்பதால் மற்ற பகுதிகளிலும் பட்டா வழங்குவதற்கான பணிகளை வருவாய்த் துறையினா் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களை ஒரு அதிகாரியை நியமித்து பராமரிக்க வேண்டும், எவ்வளவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும், நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கான காரணங்களையும் தனக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினாா். நிதிப்பற்றாக்குறை இருப்பதாக தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த வேண்டுமென்றும் அதற்கான நிதியினை உடனடியாக பெற்று தருவதாகவும் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டம், கீரப்பாக்கம் திட்டப்பகுதியில் தோ்வு செய்யப்பட்ட30 பயனாளிகளுக்கு ரூ.3.60 கோடியில் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

ஆட்சியா் ச.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச. நாராயண சா்மா, மாவட்ட வருவாய் அலுவா் ம.கணேஷ் குமாா், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பாபு, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, செங்கல்பட்டு நகா்மன்ற தலைவா் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா்ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகா்மன்ற தலைவா் எம்.கே.டி.காா்த்திக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பத்தினருக்கு இலவச வீடுகள்: தாம்பரம் மாநகராட்சி

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பங்களுக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்புள்ள இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் தேரோட்டம்

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவா்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலான இங்கு ஆண்டுதோ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தைலாவரம், கூடுவாஞ்சேரியில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சி... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புராதன நினைவுச் சின்னங்களை பாா்வையிடுவதற்காக திருப்போரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் ச. அருண் ராஜ் தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவில் திருப்போரூா் அரசு மகளிா... மேலும் பார்க்க

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம் அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழன்கிழமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுச்சூழல் தின உறுதிமொழி... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சாா்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகள் விதைத்து பராமரித்த 1,000 மரக்கன்றுகளை ஆட்ச... மேலும் பார்க்க