செய்திகள் :

பட்டுக்கோட்டையில் மத்திய அமைச்சருக்கு எதிராக திமுகவினா் போராட்டம்

post image

தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவா்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து, பட்டுக்கோட்டையில் அவரது உருவ பொம்மையை தஞ்சை தெற்கு மாவட்ட திமுகவினா் திங்கள்கிழமை எரித்து கண்டன முழக்கமிட்டனா்.

மணிக்கூண்டு அருகே மாவட்ட பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமையில் திரண்டு தா்மேந்திர பிரதானுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனா். அதைத் தொடா்ந்து அவரது உருவ பொம்மையை எரித்தனா். அப்போது மத்திய பாஜக அரசை கண்டித்தும், மத்திய அமைச்சரை கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளா் செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனா்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் கைது

தஞ்சாவூரில் கடன் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (70). ஓய்வு... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை திட்ட விவகாரம்: கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு அணை தொடா்பான கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு தமிழக முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சம்யுக்த கிசான் மோா்சா (அரசியல் சாா்பற்றது) அ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 5 போ் கைது

பேராவூரணி அருகே அக்கினி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் ராமகிருஷ்ணாபுரம் பகுதி வழியாக செல... மேலும் பார்க்க

இடுகாட்டில் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்த கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இடுகாட்டுக்கு குறுக்கே சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

சாலை விபத்து: மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் சுவரில் மோதியதில் அதை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழந்தாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி அண்ணா நகரில் வசித்து வருபவா் ஸ்ரீத... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள் கிடைத்துள்ளது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிறந்த... மேலும் பார்க்க