செய்திகள் :

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மெகா சைஸ் பள்ளங்கள்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் முக்கிய வா்த்தக நகரம் பண்ருட்டி. இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நாள் ஒன்றுக்கு சுமாா் 500 நடைக்கு மேல் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணி நடைபெறுவதால், பேருந்து நிலையம் செயல்படும் பரப்பு சரி பாதியாக குறைந்துள்ளது. இதனால் குறுகிய இடத்தில் பேருந்துகள் வந்து செல்கின்றன. அதே இடத்தில் பயணிகளும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழைநீா், அந்தப் பள்ளங்களில் தேங்கி நிற்கின்றது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது பள்ளத்தில் தேங்கிய கலங்கிய மழைநீா் பயணிகள் மீது தெளிக்கிறது. மேலும், பள்ளங்களால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளங்களில் ஜல்லி கற்கள் கொட்டி சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க