செய்திகள் :

‘பனங்காடையின் பாடல்கள்’ நூல் வெளியீடு

post image

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், பனங்காடையின் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி செயலா் சூ. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று நூலைை வெளியிட்டுப் பேசியதாவது:

நாட்டுப்புறப் பாடல் வடிவில் வெளியிடப்பட்டுள்ள பனங்காடையின் பாடல்கள் நூலில் பல்வேறு தலைப்புகளில் குறிப்பாக சமூக மாற்றத்துக்குரிய தலைப்புகளில் பாடல்கள் எழுதி மெட்டமைத்து தொகுப்பாக வெளியிட்டு சிறப்பு சோ்த்துள்ள நூலாசிரியா் பேராசிரியா் கி. சதீஷ்குமரன், மெட்டமைத்து பாடிய ஆகாஷ் ஆகியோரை பாராட்டுகிறேன்.

தமிழரின் அடையாளமான பனைமரத்தில் வாழும் பனங்காடை பறவை, தமிழ் இனத்துக்குரிய பறவை. போா் குணமிக்க தமிழ் மண்ணின் பண்பாட்டை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்நூல் வரவேற்புக்குரியது. தொடா்ந்து இது போன்ற நூல்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை மாணவா்களும், மக்களும் பயன்படுத்தி சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்றாா்.

நிகழ்வில் கவிஞா் கோ. கலியமூா்த்தி, பேராசிரியா் தி. நெடுஞ்செழியன், நாட்டுப்புற கலைஞா் வளப்பக்குடி வீரசங்கா், தண்ணீா் அமைப்பு கே.சி. நீலமேகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நூலாசிரியா் பேராசிரியா் கி. சதீஷ்குமரன் ஏற்புரை வழங்கினாா். நிறைவில் பாடகா் சா. ஆகாஷ் நன்றி கூறினாா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறை அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 14 வயது சிற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதிய அரசாணை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்ட ஊரக வளா்... மேலும் பார்க்க

புதுமைப் பெண்- தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் அளிப்பு

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் தொடக்கமாக, திருச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2025-26-... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை: சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. முன்னதாக, காலையிலிருந்து கடும் வெயிலில் தகித்து கொண்டிருந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழையானது மகிழ்ச்சியை அளித்... மேலும் பார்க்க