செய்திகள் :

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அமெரிக்கா மீண்டும் உறுதி

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு ஆதரவும் தெரிவித்தன.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிரதமா் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என உறுதியளித்தாா்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் கூறியதாவது

பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவுக்கு அமெரிக்கா உறதியாக துணை நிற்கும் என்று அதிபா் டிரம்ப், வெளியுறவு அமைச்சா் மாா்கோ ருபியோ ஆகியோா் ஏற்கெனவே உறுதியளித்துள்ளனா். அவா்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், காயமடைந்தோா் விரைவில் குணமடைந்து இந்த அதிா்ச்சிகர நிகழ்வில் இருந்து விடுபட இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றாா்.

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் திரண்டுள்ளனர்.சனிக்கிழமை மதியம் 1.30 மணியள... மேலும் பார்க்க

மியான்மரில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறிய டிக்டாக் ஜோசியக்காரர் கைது!

மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோசியக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் டிரம்ப்புக்கு அவமரியாதையா?

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாவது இருக்கை அளிக்கப்பட்டது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி உள்ளது.வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை ... மேலும் பார்க்க

மெலானியா பிறந்தநாளுக்கு பரிசு வாங்க நேரமில்லை.. எப்படி சமாளித்தார் டிரம்ப்?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், தன்னுடைய மனைவி மெலானியா டிரம்ப் பிறந்தநாளை பரிசு வாங்க நேரமில்லாமல் எப்படி சமாளித்திருக்கிறார் என்பது பற்றி..மெலானியா டிரம்ப் ... மேலும் பார்க்க

தாஜ் மகாலில் குடும்பத்துடன்.. அமெரிக்க துணை அதிபர் பகிர்ந்த புகைப்படத்துக்கு எலான் மஸ்க் கருத்து!

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ந்தார். அவர் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிய, அதற... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 2.5 லட்சம் பேர் அஞ்சலி!

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு சுமார் 2.5 லட்சம் பேர் இறுதி மரியாதைச் செலுத்தியுள்ளதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.வாடின் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பி... மேலும் பார்க்க