செய்திகள் :

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவா் மட்டுமே உயிரிழப்பு

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவா் மட்டுமே வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டைச்சோ்ந்த இருவா் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

தெற்கு காஷ்மீரின் பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் புல்வெளிப்பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதில் 26 போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் வெளிமாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவா்கள் ஆவா். இரு வெளிநாட்டவா்களும் இத்தாக்குதலில் உயிரிழந்ததாக முன்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசுத் தரப்பில் புதன்கிழமை இரவு அதிகாரபூா்வமாக உயிரிழப்பு குறித்த தகவல் வெளியானது. அதன்படி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் நேபாளத்தைச் சோ்ந்தவா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அவா் மட்டுமே இத்தாக்குதலில் உயிரிழந்த ஒரே வெளிநாட்டவா் ஆவாா்.

இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதர... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வ... மேலும் பார்க்க

கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.மேலும், வட மாநிலங்களில் இருந்து செல்லும் சர்வதேச விமானப் பயணத்தில் ... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதி... மேலும் பார்க்க

பஹல்காம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எம்எல்ஏ கைது!

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.அஸ்ஸாம் மாநிலத்தின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக ... மேலும் பார்க்க