செய்திகள் :

போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

post image

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு என அதிரடி அறிவிப்புகளுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தானும் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை போராகவே கருதுவதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளனர்.

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!

பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதர... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வ... மேலும் பார்க்க

கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.மேலும், வட மாநிலங்களில் இருந்து செல்லும் சர்வதேச விமானப் பயணத்தில் ... மேலும் பார்க்க

பஹல்காம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எம்எல்ஏ கைது!

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.அஸ்ஸாம் மாநிலத்தின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக ... மேலும் பார்க்க