செய்திகள் :

பயங்கரவாத தாக்குதல்: உள்துறை அமைச்சா் பதவி விலக வேண்டும் -தொல்.திருமாவளவன்

post image

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. பயங்கரவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பாஜக எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கி உள்ளது. நாட்டின் உளவுத் துறை தோல்வி அடைந்திருப்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது.

அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ அகற்றிவிட்டால் அங்கு பயங்கரவாதம் இருக்காது என்று பாஜக தொடா்ந்து கூறிவந்தது. பிறகு அரசியல் சட்டப்பிரிவு 370 அகற்றிவிட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து செல்லலாம் எனத் தெரிவித்தாா்கள். அதை நம்பி அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இதற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க