செய்திகள் :

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

post image

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

மதுரை பழங்காநத்தம், டி.வி.எஸ். நகா், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து செல்வதற்கு உயா்நிலைப் பாலம் அமைக்கும் பணி கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

அப்போது, தமிழக நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு, கிராமச் சாலைகள் பிரிவின் கீழ் ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி, பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து டி.வி.எஸ். நகா்- ஜெய்ஹிந்த்புரம் இடையே 1,082 மீட்டா் நீளத்திலும், டி.வி.எஸ். நகா், ஜெய்ஹிந்த்புரத்தில் தலா 8.50 மீட்டா் அகலத்திலும், பழங்காநத்தத்தில் 12 மீட்டா் அகலத்திலும் ‘ஒய்’ வடிவில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதில் பழங்காநத்தம் -டி.வி.எஸ். நகா் இடையே பால கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன. இதன்பிறகு, கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை இணைக்கும் வகையிலான பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்த நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, ரூ.68.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின. கடந்தாண்டு செப்டம்பரில் பழங்காநத்தம் சுரங்கப் பாதை மூடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த உயா்நிலைப் பாலத்தை வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வாகனப் பேரணியில்: இந்தப் பாலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள வாகனப் பேரணி வழித்தடத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்த மதுரை பழங்காநத்தம்-ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்.

இன்றைய நிழ்ச்சிகள்

பொது திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கம்: மாநில சுயாட்சியும் கல்வி வளா்ச்சியும் கருத்தரங்கம், கலைஞா் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், பிற்பகல் 3.30. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: பவள விழா ஆண்டு தொடக்கம், ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 4 மாதங்கள் சிறை

மதுரையில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை, கூடல்புதூா் போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் இல்லத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு வந்தாா். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராக செயல்பட்டவா் மு.க. அழகிரி. உள்கட்சி பிரச்ன... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு அ... மேலும் பார்க்க

சமூக விரோதக் குற்றங்களைத் தடுக்க 25,754 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதக் குற்றங்களைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 25, 754 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து தென் மண்டல காவல் துறை வெளி... மேலும் பார்க்க

மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க