அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
பரவை காய்கனிச் சந்தை ரூ. 20.10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது
நாகப்பட்டினம், ஜூன் 19: பரவை காய்கனிச் சந்தை ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் அருகே பரவையில் சொா்ணபுரீஸ்வா் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த இடத்தில் காய்கனிச் சந்தை செயல்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழைமையான பரவை காய்கனிச் சந்தையில் வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கனிகளை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வா்.
திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் காய்கனிகளை ஏலத்தில் வாங்கி சென்று விற்பனை செய்வா். ஆண்டுதோறும் பரவை காய்கனிச் சந்தைக்கான ஏலம், சந்தையிலேயே நடைபெறும். அப்போது ஏலப் போட்டியில் பிரச்னை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
இதையடுத்து பிரச்னையை தவிா்க்கும் வகையில், கடந்த ஆண்டு நாகையில் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. அதேபோல, நிகழாண்டுக்கான ஏலம் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்புடன் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலதாரா்கள் சீலிடப்பட்ட உறையில் ஏலம் கேட்டிருந்தனா். ரூ.20.10 லட்சத்துக்கு கூடுதலாக ஏலம் கேட்ட அதிமுக நிா்வாகி மணிவண்ணனுக்கு பரவை காய்கனிச் சந்தையில் குத்தகை வசூல் செய்துகொள்ள உரிமம் வழங்கப்பட்டது.