செய்திகள் :

பராமரிப்புப் பணி: பிப். 22, 23-இல் மெட்ரோ ரயில் சேவை மாற்றம்

post image

சென்னை விம்கோ நகா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) காலை 6 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணி காரணமாக நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகா் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்படுகிறது. நீல வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் விமான நிலையம் முதல் விம்கோ நகா் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதன்படி, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்களும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படும்.

விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை இரவு 9 முதல் 10 மணி வரை இயக்கப்படும் ரயில்கள், 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் 14 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். மேலும், இரவு 10 முதல் 11 மணி வரை இரு வழித்தடங்களிலும் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இதுபோல, ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை ரயில்கள் 10 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ வரை காலை 6 முதல் இரவு 11 மணி வரை 20 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க