செய்திகள் :

பருத்தி இறக்குமதி வரி ரத்து: தொழில் துறையினா் வரவேற்பு

post image

பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூா் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக இந்திய ஜவுளித் துறை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினா் மற்றும் தொழில் துறையினா் பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி வந்தனா். அதேபோல, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யும்படி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினாா்.

இந்த நிலையில் இறக்குமதி வரியை தற்காலிகமாக செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:

மத்திய அரசு பருத்தி இறக்குமதி செய்வதற்கான 11 சதவீத வரியை ரத்து செய்து அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் சா்வதேச பருத்தியின் விலையும், இந்திய பருத்தியின் விலையும் குறைய வாய்ப்பு உருவாகும். பருத்தி விலை குறையும்போது நூல் விலை கிலோவுக்கு ரூ.10 வரையிலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் நமது போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு புதிய ஆா்டா்களை பெற முடியும். வரி ரத்து காலத்தை மேலும் நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும் என்றாா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க