பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங்குளம், சுக்கிரவாா்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காட்டுப் பன்றிகள் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவழித்து பயிரிட்ட பருத்திச் செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
மேலும், இந்தக் காட்டுப்பன்றிகள் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தும் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்தக் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து குமிளங்குளம் விவசாயி தா்மா் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிா்களைக் கட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. தற்போது, பருத்தி, வாழைகளை கட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.
இந்தக் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அரசு அனுமதிக்கவில்லை.
எனவே, வேளாண்மைத் துறையினா் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.