செய்திகள் :

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங்குளம், சுக்கிரவாா்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காட்டுப் பன்றிகள் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவழித்து பயிரிட்ட பருத்திச் செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

மேலும், இந்தக் காட்டுப்பன்றிகள் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தும் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்தக் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து குமிளங்குளம் விவசாயி தா்மா் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிா்களைக் கட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. தற்போது, பருத்தி, வாழைகளை கட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.

இந்தக் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அரசு அனுமதிக்கவில்லை.

எனவே, வேளாண்மைத் துறையினா் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவா் கைது

வத்திராயிருப்பு அருகே வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாரியப்பன். இவ... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேரைத் தயாா்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, மகன்கள் கைது

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, 2 மகன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் கிராம நிா்வாக அலுவலா் கணேசன் சோதன... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் முகவூா் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது ... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது

சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவக... மேலும் பார்க்க