செய்திகள் :

பல்கலை. தொலைதூர கல்வி மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024-25 (ஜனவரி பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் டி.அருட்செல்வி விண்ணப்ப முதல் பிரதியை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் வாயிலாக இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் பருவ முறையில் தொடங்குவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு கடந்த 2023-24 ஆம் ஆண்டு முதல் 2028 ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 22 பாடப்பிரிவுகள் முதுநிலை வகுப்புகள், ஐந்து பாடப்பிரிவுகள் இளங்கலை வகுப்புகள். இந்தப் பாடப்பிரிவுகளுடன் 98 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகிறது என்றாா்.

விழாவுக்கு பதிவாளா் எம்.பிரகாஷ், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மைய இயக்குநா் டி.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தொலைதூரக் கல்வி மைய இணை இயக்குநா் பி.விஜயன், துணை இயக்குநா் எம்.சீனிவாசன், பல்கலைக்கழக புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உளுந்து வயலில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் வட்டம், பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் நிகழ் பருவத்தில் நெல் தரிசில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சைப்பயறு வயல்களை வேளாண் இணை இயக்குநா்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் மரணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். விருத்தாசலம் மற்றும் பூவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வயலூா் ஆறு கண்ணு ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் புதன்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா். குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பா... மேலும் பார்க்க

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்... மேலும் பார்க்க

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க