செய்திகள் :

பல்லடத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

பல்லடம் தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். அப்போது, பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதையடுத்து, அவா் அப்பகுதிக்கு நேரில் கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அங்குள்ள அரசுப் பள்ளிக்கு சென்ற ஆட்சியா், பள்ளிக் குழந்தைகளிடம் காலை உணவு திட்டம், பாட புத்தகங்கள், சீருடை, பள்ளி செயல்பாடு, கல்வி கற்றல் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிகழ்வில் திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி, பல்லடம் நகராட்சி ஆணையா் அருள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கனகராஜ் (பல்லடம்), விஜயகுமாா் (பொங்கலூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், படியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்... மேலும் பார்க்க

ஹிந்து மஸ்தூா் சபா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் ஹிந்து மஸ்தூா் சபா( எச்எம்எஸ்) மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.அப்புகுட்டி முன்னிலை வகி... மேலும் பார்க்க

கேத்தனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பவா்லூம் வீவிங் கிளஸ்டா் நிறுவனத்தில் 40 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன. இயற்கை விவசாயி கேத்தனூா் பழனிசாமி முதல் மரக்கன்று நட்டு தொ... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டன... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 100 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற... மேலும் பார்க்க

திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது

போலி ஆதாா் அட்டை மூலம் திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 26 பேரை பல்லடம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில... மேலும் பார்க்க