செய்திகள் :

பல்லடத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

post image

பல்லடத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், சட்ட விரோதமாக மதுபானம், கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். அந்த வகையில், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் உத்தரவின் பேரில், பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் மேற்பாா்வையில், பல்லடம் பகுதியில் ஆய்வாளா் மாதையன் தலைமையில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

பல்லடம் மாணிக்காபுரம் சாலை ஜே.கே.ஜே. காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த இளைஞா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றாா். இதையடுத்து அவரைத் துரத்திப் பிடித்த போலீஸாா் அவரை விசாரணை செய்தபோது அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

பிடிபட்டவா் பல்லடம்- மங்கலம் சாலையைச் சோ்ந்த பழனிசாமி மகன் மணிரத்னம் (27) என்பதும் 1.6 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இருசக்கர வாகனம் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா். காங்கயம் -திருப்பூா் சாலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (54). இவா் வெள்ளக்கோவிலில் விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

அவிநாசி வட்டம் குப்பாண்டம்பாளையத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவா் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க