செய்திகள் :

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

post image

மாநில திட்டக் குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டம், கவனம் சாா்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை இணைந்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமை புதன்கிழமை நடத்தின.

திருப்புவனம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அலுவலா் எஸ். ரதிதேவி தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தின் மூலம், 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பாலியல் குற்றம், குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டம், சிறாா் திருமணம் தடுப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், குழந்தைகள் கைப்பேசியை பாா்ப்பதால் ஏற்படும் தீமைகள் போன்ற தலைப்புகளின் கீழ் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் செந்தில்வேல் கலந்து கொண்டு, ‘சிறாா்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், அவற்றின் தடுப்பு முறைகள்‘ எனும் தலைப்பில் பேசினாா்.

தனியாா் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் அருள் ஜெயராஜ் பேசுகையில், இந்த திட்டத்தின் நோக்கம் குறித்தும், கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை திருப்புவனம் பகுதியில் உள்ள 49 பள்ளிகளில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்களில் மொத்தம் 4,308 மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா் என்றாா்.

முன்னதாக, அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வரவேற்றாா். மாவட்ட மிஷன் ஒருங்கிணைப்பாளா் கே. ஈஸ்வரி நன்றி கூறினாா். இந்த முகாமில் 122 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க

சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் ... மேலும் பார்க்க