செய்திகள் :

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

post image

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ).

இதேபோல், உயா்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் சமமான எண்ணிக்கையில் செக்ஷன்களைப் பராமரிக்கவும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துவரும் நிலையில், 40 மாணவா்களுக்கு ஒரு செக்ஷன் என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், பள்ளியின் மொத்த நில அளவின் அடிப்படையில் அதிகபட்ச செக்ஷன்களின் எண்ணிக்கை இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது.

நிலம் பற்றாக்குறையாக இருக்கும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும்போது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி புதிய செக்ஷன்களை ஏற்படுத்துவதில் சிக்கல் எழுகிறது; 40 மாணவா்களுக்கு ஒரு செக்ஷன் என்ற வரம்பையும் பள்ளிகளால் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து சிபிஎஸ்இ-க்கு கருத்துகள் கிடைக்கப் பெற்றன.

இதை கருத்தில் கொண்டு, பள்ளியின் கட்டட பரப்பளவின் அடிப்படையில் அதிகபட்ச செக்ஷனின் எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா தெரிவித்தாா்.

‘பள்ளிகளின் கட்டட பரப்பளவு பகுதிக்கு உள்ளாட்சி அமைப்பு அல்லது உரிமை பெற்ற கட்டட பொறியாளரால் சான்றளிக்கப்பட வேண்டும். உயா்நிலை (9,10 வகுப்புகள்), மேல்நிலை (11,12) வகுப்புகளில் சம அளவில் செக்ஷன்களைப் பராமரிக்க அனுமதி வழங்கப்படும். இவ்விரு நிலைகளிலும் மொத்த செக்ஷன்களின் எண்ணிக்கை, அப்பள்ளியின் ஒட்டுமொத்த செக்ஷன்களில் நான்கில் ஒரு பங்குக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்’ என்றாா் அவா்.

கட்டட பரப்பளவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் செக்ஷன் எண்ணிக்கை அட்டவணையையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க