செய்திகள் :

பள்ளிக் காவலாளியை கத்தியால் குத்தியதாக 3 சிறுவா்கள் கைது

post image

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து பாதுகாவலாளியை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மே 25 அன்று, சுபாஷ் பாா்க்கில் உள்ள ஏடிஎம் முன் சௌராசியா பான் அருகே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு சோனு சிங் (33) என்பவா் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டனா். அவா்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

பாபா்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பாதுகாவலாளியாகப் பணிபுரியும் சோனு சிங், இரவு 9.50 மணியளவில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்றபோது தாக்கப்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா். த னக்கும் தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது சிறுவா்கள் அவரை கத்தியால் தாக்கியதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையின் போது, ஒரு போலீஸ் குழு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டது. பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் 16 முதல் 17 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் ஆவா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க