செய்திகள் :

பள்ளி மாணவர்களை பாதிக்கும் ரெளடிகளின் மீம்ஸ் & ரீல்ஸ்... கொலை சம்பவங்களின் பகீர் பின்னணி

post image

நெல்லையில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் வகுப்பறையிலேயே தன் நண்பரை அரிவாளால் வெட்டியதுடன், அதனை தடுக்க முயன்ற ஆசிரியையையும் 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸார் கூறியதாவது, “யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வன்முறை தொடர்பான வீடியோக்களை பார்த்ததால் நண்பரையும், ஆசிரியையும் அரிவாளால் வெட்டினேன். என்னை சீர்திருத்தப்பள்ளியில் சேருங்கள் எனக் கூறியுள்ளார்.

இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் ஒன்றை பகிர்ந்து கொள்வதில் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர் இந்த பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

காலாண்டுத் தேர்வு வரை  மற்றொரு பள்ளியில் படித்து வந்த அவர், அங்கிருந்து டி.சி வாங்கிவிட்டு இப்பள்ளிக்கு வந்துள்ளார். அவர் விளையாட்டு வீரர் என்பதால்  இப்பள்ளியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.” என்றனர்.  

தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சமீப காலமாக பள்ளி மாணவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்தில் பள்ளிக்கு தேர்வெழுத வந்து கொண்டிருந்த மாணவருக்கும்,  நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

தற்போது நெல்லை தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன், சக மாணவரையும், ஆசிரியையையும் வெட்டியுள்ளார்.

இதேபோல் ராமநாதபுரம் நகர் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அரசுத் தேர்வு எழுதிவிட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதோடு வெளிநபர்களை அழைத்து வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

தென் மாவட்டங்களில் இதே போன்று மாணவர்கள் மோதிக் கொள்வதற்கு முக்கிய  காரணமே தென் மாவட்ட ரெளடிகளின் மீம்ஸ் வீடியோதான் எனக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

தென் மாவட்டத்தில் பல்வேறு ரெளடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள், தாங்கள்தான் பெரிய ஆள், கெத்து போன்ற பெயரை வாங்க கையில் வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சாதி சார்ந்த வீர வசனம் பேசும் வீடியோக்களை ரீல்ஸாக வெளியிடுகிறார்கள்.

இதைப் பார்க்கும் மாணவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்து மோதிக் கொள்கிறார்கள்.  இதனாலேயே புத்தகப்பைகளில் புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டிய மாணவர்கள் ஆயுதங்களை தூக்கிச் செல்கிறார்கள்.

இதை மாணவர்களின் பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. மாணவர்களின் இந்த மனநிலையை மாற்ற உரிய கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்கிறார்கள்  சமூக ஆர்வலர்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க

சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த... மேலும் பார்க்க

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க