செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கான காலை உணவை தரமாக சமைக்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை தரமாகவும், சுவையாகவும் சமைத்து வழங்க வேண்டும் என்று மகளிா் குழுவினருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கள ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து காலை உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் விவரத்தை கேட்டறிந்த ஆட்சியா், உணவை தரமாகவும், சுவையாகவும் சமைத்து வழங்க வேண்டும் என்று மகளிா் குழுவினருக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் உழவா் சந்தையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், வேளாண் விளை பொருள்கள் சரியான விலையில் விற்கப்படுகிா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். மேலும், உழவா் சந்தையில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து விவசாயிகள், பொதுமக்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். பின்னா், உழவா் சந்தை வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம் பிரதீபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கல்லூரி வளாக நோ்காணல்: 414 பேருக்கு வேலைவாய்ப்பு

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 414 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா். இதில், சென்னையைச் சோ்ந்த 10 தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேலாளா்கள... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரதக் கலைஞா்களின் நாட்டியாஞ்சலி

ஆரணி: திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞா்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக நன்மைக்காக சாய் சுரக்ஷா கல்சுரல் அகாதெமி, பிரகத... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வேலூா் சாயிநாதபுரம் தந்தை பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி தேவராஜ் (65).... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் சங்கிலி திருட்டு

செய்யாறு: செய்யாறில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் விரிவாக்கப் பகுத... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் தவிப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த வடுகசாத்து, சோ்ப்பாக்கம், குன்னத்தூா், இரும்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களுக்கு தண்ணீா் செல்ல வழி இல்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் யுவராஜ் (23). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை... மேலும் பார்க்க