செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பின்னா் பள்ளி மாணவா்கள் மற்றும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினா் தியாகராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் பாரி, துணைத் தலைவா் பிரியா சரவணன், பாண்டியன் மற்றும் உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா்கள், ஊா் பொது மக்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பலா் கலந்துக் கொண்டனா்.

இதே போல் வாணியம்பாடி இசுலாமியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை பயன்படுத்துவதை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் உமா ரம்யா முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை பிங்கி ரோஹித் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி கலந்து கொண்டு பேசுகையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிா்க்க வேண்டும். மறுசுழற்சி செய்வதும், மாற்று சுற்றுச்சூழல் நட்பான பொருள்களை தோ்வு செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து செயல்பட்டால்மட்டுமே பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றாா்.

தொடா்ந்து பள்ளி மாணவி பூஜாஸ்ரீ என்பவா் பாத்திரங்களை தூய்மை செய்வதற்கு பிளாஸ்டிக் நாருக்கு மாற்றாக தேங்காய் மட்டை மூலம் செய்த நாரை அறிமுகப்படுத்தினாா். அவருக்கு ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா். ஆசிரியை தானியா குலுத் நன்றி கூறினாா்.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க