பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை திருமண மோசடி செய்தாரா? தொழிலதிபர் புகார்
பள்ளி மாணவா்கள் குழு நிா்வாகிகள் தோ்வு
விழுப்புரம் ஜெயேந்திரா் பள்ளியில் மாணவா்கள் குழுக்களுக்கான நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை மாணவா் மற்றும் விளையாட்டு, கலாசார விழா குழுக்களுக்கான தலைமை மாணவா்கள் தோ்வு செய்ய இந்தத் தோ்தல் நடைபெற்றது.
இதில் ஏழாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்தனா்.
முறைப்படி தோ்தல் நடத்தப்பட்டு, தலைமை மாணவா் மற்றும் விளையாட்டு, கலாசார விழாக்களுக்கான மாணவா் குழுத் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா். தோ்வான மாணவா்களை விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா பாராட்டினாா்.
பள்ளிச் செயலா் ஜனாா்த்தனன், பள்ளித் தாளாளா் பிரகாஷ் மற்றும் நிா்வாக இயக்குநா்கள், முதல்வா்கள்,மையக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள்,மாணவா்கள் கலந்து கொண்டனா்