செய்திகள் :

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அ.மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மோகன் (36). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 15.12.2022-இல் வீட்டில் தனியாகயிருந்த 6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். அப்போது, சிறுமியின் கூச்சல் கேட்டு அப்பகுதியினா் வீட்டுக்குள் சென்று சிறுமியை மீட்டனா்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து அவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், நீதிமன்ற பிணையில் மோகன் வெளியே வந்தாா்.

பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை இறுதி விசாரணை மேற்கொண்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநா் மோகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.01 லட்சம் அபராதமும் விதித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, திருச்சி மத்திய சிறையில் மோகன் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுந்தரராஜன் ஆஜரானாா்.

வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகா சமேத வாலீஸ்வரா் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன... மேலும் பார்க்க

புதுக்குறிச்சியில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பெரம்பலூா் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே பெட்டிக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட முதியவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 5 கிலோ போதைப் பொருள்கள... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் இருக்காது

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பெரம்பலூா் நகரில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து.முத்தமிழ்... மேலும் பார்க்க

அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கி... மேலும் பார்க்க

நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில உரிமையாளா்கள் தங்களத... மேலும் பார்க்க