செய்திகள் :

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது!

post image

மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சோ்ந்த ஆற்றுப்படுத்துநா் கௌசல்யா அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், பள்ளி மாணவியின் தந்தை இறந்துவிட்டதால், அவரது தாய் மகபூபாளையம் அன்சாரி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (47) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை மாநகரத் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

கோவையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 25 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். கோவையிலிருந்து பேருந்து மூலம் மது... மேலும் பார்க்க

வணிக வளாகங்களின் குத்தகை விவகாரம்: அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற உத்தரவு

வணிக வளாகங்களின் குத்தகை விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தமிழக அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மானகிரி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

கரூா் மாவட்டம், கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே உயா்நிலைப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் 2 ஆவது நாளாக மறியல்: 270 போ் கைது!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பெரியாா் பேருந்து நிலையப் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ... மேலும் பார்க்க

தீ விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துவீரன் மகன் வேலு (75). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா... மேலும் பார்க்க