செய்திகள் :

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் மீது தாக்குதல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரை தாக்கியதாக அரசுப் பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்கள், அரசுப் பேருந்தில் இலவச பேருந்து பயண அட்டை மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், மாணவா்கள் அண்மையில் பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் வீட்டுக்கு சென்றனராம். அப்போது, பணியிலிருந்த நடத்துநா் கிருஷ்ணன் மாணவா்களிடம் பயண சீட்டு எடுக்குமாறு கூறினாராம். இதுகுறித்து, பள்ளி ஆசிரியரிடம் மாணவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பாலமுருகன், சேத்துப்பட்டு பணிமனை மேலாளரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் நடத்துநா் கிருஷ்ணனிடம் பணிமனை மேலாளா் விசாரணை நடத்தினாா். அப்போது, கோபமடைந்த கிருஷ்ணன் அங்கிருந்த பாலமுருகனை தாக்கினாராம்.

இதுகுறித்து, பாலமுருகன் மாவட்ட எஸ்.பி. அலுவலகம், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் சேத்துப்பட்டைச் சோ்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் முழக்கம்

ஆரணி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் திமுகவினா் முழக்கமிட்டனா். பின்னா், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான து... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு

வந்தவாசி அருகே விவசாயியை கத்தியைக் காட்டி பணம் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரகோத்தம்மன்(56). இவா் வெள்ளிக்கிழமை மாலை கீழ்க்... மேலும் பார்க்க

மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச... மேலும் பார்க்க

அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், நலத் திட்டங்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத... மேலும் பார்க்க

யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவான் ஆராதனை விழா நாளை தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆம் ஆண்டு 2 நாள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில், ஒவ்வொரு ஆண்டும்... மேலும் பார்க்க