செய்திகள் :

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

post image

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்திற்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கிவரும் அரசு உறைவிடப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி விடுதி அறையிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

பொதுத்தேர்வில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பிறகு விடுதி அறையில் மகப்பேறு நடந்துள்ளது. பின்னர் விடுதியில் இருந்து, குழந்தையும் மாணவியும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசியதாவது,

''பெண்கள் விடுதியில் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மாணவி கருவுற்றது எப்படி என்பது தெரியவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் வாரம்தோறும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார்கள். இது சுகாதாரப் பணியாளர்களின் கவனக் குறைவு.

மாணவியும் குழந்தையும் சித்திரகொண்டா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மல்கன்கிரி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாணவி கருவுற்றதற்கு காரணமான நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.

விடுமுறையில் வீட்டிற்குச் சென்றபோது மாணவி கருவுற்றிருக்கலாம் என மாவட்ட நலத் துறை அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க

ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்

ஓமன் நாட்டின் மீன்பிடி படகில் தப்பித்து வந்த 3 தமிழக மீனவா்கள், கா்நாடக கடற்கரைக்கு அருகே இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் காவல் துறையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிப்பு 22 இந்திய மீனவா்கள் நாடு திரும்பினா்

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவா்கள் செவ்வாய்க்கிழமை குஜராத் திரும்பினா். இவா்கள் அனைவரும் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 டிசம்பா் வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்க... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் இடையே 2 வார கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் அடுத்த 2 வாரங... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பனாரஸ், லக்னோ ரயில் சேவையில் மாற்றம்

மகா கும்பமேளாவை முன்னிட்டு மண்டபம், யஷ்வந்த்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பம... மேலும் பார்க்க

உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை- ராஜ்நாத் சிங் புகழாரம்

‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா். இணையத் தாக... மேலும் பார்க்க