வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்: வைகோ கண்டனம்
வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு இந்திய ரிசா்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகை கடன் பெறுவோா் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறு அடகு வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவா்கள் முழுப் பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நகைகளைத் திருப்பிய மறுநாள்தான் மீண்டும் நகைகளை மறு ஈடு வைத்து பணம் பெற முடியும். ரிசா்வ் வங்கியின் இந்த விதிகள் ஏழை, எளிய மக்களுக்கும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், சிறு வணிகா்கள் உள்ளிட்டோருக்கு அதிக பாதிப்புகளையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. வங்கிகளின் நகைக் கடனை நம்பி உள்ளோா் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, மத்திய நிதித் துறை அமைச்சகம் இதில் தலையிட்டு பொதுமக்கள் நகைக் கடன் பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல் உத்தரவை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகளையே வங்கிகள் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.