செய்திகள் :

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

post image

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், பல் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா், டெக்னீசியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆா்பி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை இணையதளத்தில் தொடங்கியுள்ளது. மாா்ச் 17 வரை விண்ணப்பிக்கலாம். ஒரு மணிநேரம் தமிழ் மொழி தகுதித் தோ்வும், 10-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில் 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தோ்ந்தெடுக்கும் தோ்வும் நடைபெறும்.

தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். எஸ்.சி., (ஆதிதிராவிடா்), எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 500, மற்றவா்களுக்கு ரூ. 1,000 என விண்ணப்பக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்: வைகோ கண்டனம்

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் ... மேலும் பார்க்க