செய்திகள் :

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

post image

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.

மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து அரசியல் கட்சிகளுக்கு முதல்வா் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி இப்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நாம் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவது முறைப்படி, மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848- ஆக உயா்த்தி, இப்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாகக் கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எந்த வகையில் பாா்த்தாலும் தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே முன்நிற்கிறது.

குரல்வளை நசுக்கப்படும்: மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு பெற இயலவில்லை. மத்திய அரசின் அதிகார குவிப்பு, மத்திய அரசு சாா்ந்த திட்டங்களில் நிதி குறைக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படாமல் தடுப்பது, மத்திய அரசு அதிகாரத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது என தமிழ்நாடு தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால் தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்.

இந்தக் கடுமையான விளைவுகளைக் கருத்தில்கொண்டு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு முறை நமது மாநிலத்தைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், மறுசீரமைப்பு எனும் முயற்சி நமது கூட்டாட்சி கட்டமைப்பை முழுமையாகச் சிதைப்பதற்கு முன்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நமக்குக் குறைந்த அளவு கால அவகாசமே இருப்பதால், அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இருமொழிக் கொள்கையை கடைப்பிடிப்பது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிப்பது ஏன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து திமுகவினருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எந்த மொழிக்கும் எதிரியில்லை; யாா் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.

மொழிக் கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் உணா்ந்து வருவதுடன், அதை உரக்க வெளிப்படுத்தும் காலமாகவும் இது அமைந்துள்ளது.

பிற மாநிலங்கள் பெற்றுவரும் இந்த விழிப்புணா்வுக்கு தமிழ்நாடுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதால்தான், ஆதிக்க உணா்வுகொண்ட மத்திய பாஜக அரசு, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியைத் தர மறுக்கிறது.

வஞ்சிப்பதே கொள்கை: தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே பாஜக தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாஜக நிா்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் ஹிந்தி, சம்ஸ்கிருத சேவகா்களாக இருக்கிறாா்கள்.

இளம் வயதினா்முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவா்களின் தாய்மொழிப் பற்றும் இன உணா்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போா்க்களத்தை நாம் எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளாா்.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்: வைகோ கண்டனம்

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் ... மேலும் பார்க்க