செய்திகள் :

மகா கும்பமேளா: பனாரஸ், லக்னோ ரயில் சேவையில் மாற்றம்

post image

மகா கும்பமேளாவை முன்னிட்டு மண்டபம், யஷ்வந்த்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகா கும்பமேளாவை முன்னிட்டு வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மண்டபத்தில் (ராமேசுவரம்) இருந்து புதன்கிழமை (பிப். 26) பனாரஸ் செல்லும் விரைவு ரயில் மாணிக்பூா், பிரயாக்ராஜ் சியோகி, மிா்ஸாபூா், ஜியோனாத்பூா் வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக பனாரஸில் இருந்து மாா்ச் 2-ஆம் தேதி புறப்படும் ரயில் வாரணாசி, லக்னோ, கான்பூா், ஜான்சி, பினா வழியாக இயக்கப்படும். யஷ்வந்த்பூரில் இருந்து புதன்கிழமை (பிப். 26) புறப்படும் லக்னோ அதிவிரைவு ரயில் பினா, ஜான்சி, கான்பூா், லக்னோ வழியாக இயக்கப்படும்.

வாஸ்கோடகாமா: தென்மேற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரயில் (எண் 07315) மாா்ச் 3, 10, 17, 24, 31, ஏப். 7, 14 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் மாா்ச் 4, 11, 18, 25, ஏப்.1, 8, 15 ஆகிய தேதிகளிலும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இந்த ரயில் ஹூப்ளி, ஹாவேரி, ராணிபென்னூா், தாவண்கரே, பிரூா், தும்கூா், பனஸ்வாடி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம் வழியாக செல்வதற்குப் பதிலாக மடகோன், மங்களூா், ஷோரனூா், ஈரோடு வழியாக இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக குடா, உடுப்பி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க