செய்திகள் :

பழநி: கோவில் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்; கோவில் சேவைகள் முடக்கம்; பின்னணி என்ன?

post image

பழநி முருகன் கோவிலுக்குக் கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கறிஞரான பிரேமலதா என்பவர் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு வந்துள்ளார்.

சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக வின்ச் நிலையத்தில் கட்டணச் சீட்டு பெறக் காத்திருக்கும்போது பணியிலிருந்த தனியார் நிறுவன பாதுகாவலர் மதுரைவீரனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடிவாரம் காவல் நிலையத்தில் மதுரைவீரன் மீது புகார் அளித்தார் வழக்கறிஞர் பிரேமலதா. புகாரின் பேரில் அடிவாரம் காவல் துறையினர் நேற்று மதுரைவீரனை விசாரணைக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர்.

கோவில் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த கோவில் அதிகாரிகள், காவலாளி மீது எந்தத் தவறும் இல்லை என்பதைக் கூறி பாதுகாவலரிடம் தகராறு செய்ததாக பிரேமலதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் காவல்துறையினர் மதுரை வீரனை மட்டும் விசாரணைக்கு அழைத்து கைது செய்வதாகவும், தாங்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பழநி கோவிலில் டிக்கெட்டுகள் வழங்கும் பணி, பேட்டரி கார்கள், பாதுகாப்புப் பணிகள், ரோப் கார், மின் இழுவை ரயில் சேவைகள் எல்லாம் முடங்கியதால் பக்தர்கள் அவதியுற்றனர்.

இரவு 10 மணியைத் தாண்டியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மதுரை வீரனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியாதபடி பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

இவர்களுக்கு ஆதரவாக கோவில் உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர்கள் பிரேமலதாவிற்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கைகளைப் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருதரப்பும் 12 மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் அடிவாரம் காவல்துறையினர் பாதுகாவலர் மதுரை வீரன், வழக்கறிஞர் பிரேமலதா என இருதரப்பு மீதும் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இரவு 1 மணி அளவில் போராட்டம் நிறைவடைந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-விவசாயிகள் கோரிக்கை!

ராமேஸ்வரத்தில் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம் மற்றும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கச்சத்தீவு மீட்பு மாநாட்டினை நடத்தினர். மீனவர் நலவாரிய உறுப்பினர் சேசு ராஜா,... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: `தரிசனம் செய்ய கட்டுப்பாடு' - ஆலய பிரவேச போராட்டத்தில் குதித்த மக்கள்.. நடந்தது என்ன?

ராமாயண தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்தம் - மூர்த்தி - தலம் என மூன்று வகையாலும் சிறப்பு பெற்றது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் பாம்பன் கால்வாயினை கடப்பதற்கு ரா... மேலும் பார்க்க