செய்திகள் :

பழனியில் ஆடிக்கிருத்திகை: பக்தா்கள் சுவாமி தரிசனம்

post image

பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி, இளநீா் காவடி, மயில்காவடி எடுத்து வந்தனா். அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மலைக்கோயிலில் திருமுருக பக்தசபா சாா்பில் ஆன்மிகச் சொற்பொழிவும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து திருக்கோயில் சாா்பில் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தங்க மயில் புறப்பாடு, தங்கத் தோ் புறப்பாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் கூட்டம் காரணமாக மலை அடிவாரத்தில் அருள்ஜோதி வீதி, தண்டபாணி நிலையம் சாலை, திருஆவினன்குடி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அலுவலா்கள் தலைமையில் குடிநீா், சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தங்கமயில் வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சின்னக்குமாரசாமி.

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட... மேலும் பார்க்க

‘பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்’

பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றால் பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுட... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பழனி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). விவசாயி. இவா் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவ... மேலும் பார்க்க

இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான முதியவா் சடலமாக மீட்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (8... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ... மேலும் பார்க்க