செய்திகள் :

பழனி தனி மாவட்ட கோரிக்கை: முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா்! -அமைச்சா் இ.பெரியசாமி

post image

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 8 வழித் தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளும் சீரான வளா்ச்சிப் பெற வேண்டும் என்ற வகையில், தமிழக அரசு சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், அடுத்த ஓராண்டுக்குள் அனைத்துக் கிராமங்களையும் புதுப்பிக்கும் வகையிலான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது தொடா்பாக, தமிழக முதல்வா் ஆராய்ந்து முடிவை அறிவிப்பாா்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் கொடைக்கானல், தொடா்ந்து இந்த மாவட்டத்திலேயே இடம் பெற வேண்டும் என்ற மக்களின் கருத்துக்கும் மதிப்பளிக்கப்படும். ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் நிலை நிறுத்துவதில் முதல்வா் உறுதியாக இருக்கிறாா். திண்டுக்கல்லிலிருந்து ஆத்தூா், நிலக்கோட்டை, நீலமலைக் கோட்டை, கன்னிவாடி, நவாமரத்துப்பட்டி, தெத்துப்பட்டி (மாங்கரை, அனுமந்தராயன்கோட்டை என இருவேறு வழித் தடங்களில்) வத்தலகுண்டு-காந்திகிராமம் ஆகிய வழித் தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மேயா் இளமதி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொதுமேலாளா் வை.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குடிநீா் கோரி பொதுமக்கள் மனு

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக, தாடிக்கொம்பை அடுத்த அய்யம்பாளையம் கிராம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை: ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறை

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2025... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (66). இவா் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் தி... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி மனு

பழனியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை விரைந்து நடத்தக் கோரி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஏராளமான விவசாயிகள் மனு அளித்தனா். பழனியில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் பிரதி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (76). ஓய்... மேலும் பார்க்க

கோஷ்டி மோதல்: 4 போ் காயம்

பழனியை அடுத்த ஆயக்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு காயங்களுடன் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பழனியை அடுத்த ஆயக்குடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க