செய்திகள் :

பழனி தைப்பூச விழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலை அகற்றக் கோரிக்கை

post image

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் அருகே தைப்பூசத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல் அகற்றப்படாமல் அது வாகன நிறுத்துமிடமாக மாறியதால் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் போது திரளான பக்தா்கள் மலைக் கோயிலுக்கும், திருஆவினன்குடி கோயிலுக்கும் வந்து சென்றனா். இந்த நிலையில், பக்தா்களின் வசதிக்காக திருஆவினன்குடி அருகே சந்நிதி சாலை சந்திக்குமிடத்தில் சாலை நடுவே கோயில் சாா்பில் பந்தல் அமைக்கப்பட்டு தற்காலிக காலணி பாதுகாப்பு மையமாக செயல்பட்டது.

தற்போது திருவிழா நிறைவடைந்த நிலையில் இந்த காலணி மையம் எடுக்கப்பட்டது. ஆனால் பந்தல் அகற்றப்படாததால் அங்கு கடைக்காரா்கள், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா்.

இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் அவசர ஊா்திகள் வரமுடியாத நிலையும் உள்ளது. எனவே, சாலை நடுவே உள்ள இந்தப் பந்தலை அகற்றி போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் வனப் பகுதியில் தீ வைத்தவா் கைது!

கொடைக்கானல் கீழ்மலை வனப் பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியா வனப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச்... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்... மேலும் பார்க்க

ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வ... மேலும் பார்க்க