செய்திகள் :

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

post image

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் பல்வேறு தேவைகளுக்கு இங்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பேருந்தின் உள்பகுதியில் சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்ததால், ஆக்கிரமிப்பு அதிகாரித்தன.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் ஸ்வேதா, நகராட்சி பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, வருவாய் அலுவலா் விஜயபால்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் பேருந்து நிலையத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை பொக்லயன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க

‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’

இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தூா்வார வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக கொடகனாறு பாத... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவைய... மேலும் பார்க்க

தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை (லிட்), திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில், துணை மேலாளா்(வணிகம்) கா.ரவிக்குமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க