செய்திகள் :

நகை திருடிய பெண் கைது!

post image

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தாா். பின்னா், பேருந்துக்காக காத்திருந்த அவரிடமிருந்த 8 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத பெண் ஒருவா் திருடிக் கொண்டு மாயமானாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வந்தனா்.

இந்த நிலையில், செம்பட்டி பேருந்து நிலையத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி நாகலட்சுமியை (51) போலீஸாா் கைது செய்து நிலக்கோட்டை மகளிா் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சங்கீதாவிடம் நகை திருட்டில் ஈடுபட்டவா் நாகலட்சுமி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, சங்கீதவிடம் நகை திருடியதை ஒப்புக் கொண்டாா்.

பின்னா், இவரிடமிருந்து 7 பவுன் தங்க நகையை போலீஸாா் மீட்டு, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

கொடைக்கானல் வனப் பகுதியில் தீ வைத்தவா் கைது!

கொடைக்கானல் கீழ்மலை வனப் பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியா வனப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச்... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்... மேலும் பார்க்க

ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் கணிதத் துறை சாா்பில் கருத்தரங்கம்!

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை சாா்பில், ‘குவாண்டம் இயக்கவியல் அமைப்புகளின் அடிப்படைகள், முன்னேற்றங்கள் ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு து... மேலும் பார்க்க