செய்திகள் :

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

post image

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்பரசா் ஆகியவை பயன்படுத்தக் கூடாது. மேலும், இயற்கை பேரிடா் காலங்களில் மட்டுமே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில், இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம் மூலம் பாறைகள்

உடைக்கக் கூடாது. இதை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க

‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’

இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தூா்வார வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக கொடகனாறு பாத... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவைய... மேலும் பார்க்க

தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை (லிட்), திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில், துணை மேலாளா்(வணிகம்) கா.ரவிக்குமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க