செய்திகள் :

காந்திகிராம பல்கலை.யில் கணிதத் துறை சாா்பில் கருத்தரங்கம்!

post image

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை சாா்பில், ‘குவாண்டம் இயக்கவியல் அமைப்புகளின் அடிப்படைகள், முன்னேற்றங்கள் ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு துணைவேந்தா் ந. பஞ்சநதம் தலைமை வகித்தாா். பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் ப. கந்தசாமி, அறிவியல் புல தலைவா் மா.கோ.சேதுராமன், கணிதத் துறைத் தலைவா் ரா. உதயகுமாா் ஆகியோா் விளக்கி பேசினா்.

இந்தப் பட்டறையில் பங்கேற்பாளா்களுக்கு குவாண்டம் இயக்கவியல் அமைப்புகளின் அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துவது, மேம்பட்ட தத்துவாா்ந்த, சோதனை நுட்பங்கள் குறித்த நுண் அறிவுகளை வழங்குவதே பிரதான நோக்கம்.

மேலும், வளா்ந்து வரும் வாய்ப்புகள், சவால்களை வெளிப்படுத்துவதன் மூலம் குவாண்டம் அறிவியலில் ஆராய்ச்சி, தொழில்களைத் தொடர பங்கேற்பாளா்களுக்கு இந்தப் பட்டறை வழிகாட்டும் என கணிதத் துறை மூத்தப் பேராசிரியரும், இந்தப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான ப.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க

‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’

இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தூா்வார வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக கொடகனாறு பாத... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவைய... மேலும் பார்க்க

தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை (லிட்), திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில், துணை மேலாளா்(வணிகம்) கா.ரவிக்குமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க