செய்திகள் :

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

post image

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மையில் மீனவரின் விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து மயிலாடுதுறை எம்.பி ஆய்வு செய்தாா். அப்போது, அவரிடம் பழையாா் மீனவா்கள் கோரிக்கை மனு அளித்து கூறியது: பழையாா் துறைமுகம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் கட்டுப் பணி நடைபெறுகிறது. அதை 500 மீட்டா் கூடுதலாக நீடித்து கட்ட வேண்டும். தற்போதுள்ள படகு அணையும் தளம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு மனைப்பட்டா இல்லாத மீனவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எம்.பி யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்பி கூறினாா்.

தொடா்ந்து, தீ விபத்தில் சேதமடைந்த விசைப்படகு உரிமையாளா் கோவிந்தன் குடும்பத்துக்கு எம்பி ஆறுதல் கூறி வங்கி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டாா். அவருடன், காங்கிரஸ் மாநிலபொதுச் செயலாளா் கணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் சிவராமன், மாவட்ட செயலாளா் பானுசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-இல் உங்களைத் தேடி முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-ஆம் தேதி உங்களைத் தேடி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி எம்பியிடம் மனு

சீா்காழி: சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு வருகை புரிந்த ஆா். சுதா எம்.பியிடம் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை மனு அண்மையில்அளித்தனா். சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆற்றங்கரை தெர... மேலும் பார்க்க

தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 தோ்வு எழுதிய மாணவா்

சீா்காழி: சீா்காழியில் தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 மாணவா், பொதுத் தோ்வு எழுதிவிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அகரதிருக்கோலக்கா தெருவைச் சோ்... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க