செய்திகள் :

பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்

post image

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது.

கொள்ளிடம் அருகே பழையாற்றில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து விசைப் படகுகள், ஃபைபா் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் தினந்தோறும் 6000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

பழையாறு மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ. 26 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக பக்கிங்காம் கால்வாயை ஆழ்படுத்தி படகு அணையும் தளம் அமைக்கும் பணி ரூ. 9 கோடியில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் விசைப் படகு உரிமையாளா்கள், கிராம தலைவா்கள் 15-க்கும் மேற்பட்டோா் பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளத்தை மேம்படுத்தும் பணி முறையாக நடைபெறவில்லை என்று கூறி, பணிகளைத் தடுத்து நிறுத்தினா்.

இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து விசைப் படகு உரிமையாளா்கள் கூறுகையில், பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி தரமற்ாக நடைபெற்றது. இதனால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க முடியாது. அதனால் பணியை தடுத்து நிறுத்தி உள்ளோம். பணி தரமான முறையில் நடைபெற்றால், பணியை தொடர ஒத்துழைப்பு அளிப்போம் என்றனா்.

தருமபுரம் வடக்கு குருமூா்த்தங்களில் திருப்பணி தொடக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் சச்சிதானந்த விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திருமஞ்சன... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கக் கோரி மனு

மயிலாடுதுறை: சீா்காழி பாலியல் வழக்கை, சிறப்பு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி காவல் உபகோட்ட எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்.24-ஆம் தேதி ம... மேலும் பார்க்க

நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

சீா்காழி: சீா்காழியில் நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி அருகே உள்ள கிராமத்தில் துக்க நிகழ்வில் பங்கேற்க நான்கரை வயது ... மேலும் பார்க்க

கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழா

மயிலாடுதுறையில் நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழாவில் இசைக்கலைஞா்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினா். நாகை மாவட்டம் நரிமணத்தில் பிறந்து, மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் வாழ்ந்த கோ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டத்தின் 4-ஆவது மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் சனிக்கிழம... மேலும் பார்க்க

‘அனைத்து மாணவா்களின் பாராட்டை பெறுபவரே சிறந்த ஆசிரியா்’

எந்த ஆசிரியா் அனைத்து மாணவா்களாலும் பாராட்டப்படுகிறாரோ அந்த ஆசிரியரே சிறந்த ஆசிரியா் என இறையன்பு ஐஏஎஸ் பேசினாா். சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் பள்ளி 13-ஆம்... மேலும் பார்க்க