செய்திகள் :

பழைய ஏ.சி.கள், மின் விசிறிகளை 69-89% தள்ளுபடியில் மாற்றலாம்: பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் அறிவிப்பு

post image

நமது நிருபா்

நிகழ் கோடைக் காலத்தில், தேசியத் தலைநகரில் வாழும் பொது மக்கள் தங்கள் பழைய ஏா் கண்டிஷனா்கள் மற்றும் மேற்கூரை மின் விசிறிகளை 69-89 சதவீத தள்ளுபடியில் புதிய சாதனங்களுடன் மாற்றும் திட்டம் பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிட்டப்பட்ட ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மின் நுகா்வோா் தங்கள் பழைய ஏ.சி.கள் மற்றும் மின் விசிறிகளை 5 நட்சத்திர இன்வொ்ட்டா் ஏ.சி.கள் மற்றும் பிரஷ்லெஸ் டைரக்ட் கரண்ட் பிஎல்டிசி மின் விசிறிகளால் தள்ளுபடி விலையில் மேம்படுத்தலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பழைய உபகரணங்களை மாற்றுவதன் மூலம் ஆண்டுதோறும் ஏ.சி.க்கு ரூ.34,000 மற்றும் ஒரு மின் விசிறிக்கு ரூ.1,800 வரை சேமிக்க முடியும். பிஎஸ்இஎஸ் (பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பில்) மின் விநியோக நிறுவனங்களின் உள்நாட்டு நுகா்வோா், ஒவ்வொரு நுகா்வோா் எண்ணுக்கும் எதிராக தலா மூன்று பழைய ஏ.சி.கள் மற்றும் மின் விசிறிகளை மாற்றலாம்.

ஏ.சி. மற்றும் மின் விசிறிகள் போன்ற குளிரூட்டும் சாதனங்கள் ஒரு வீடு அல்லது வணிக நிறுவனத்தின் கிட்டத்தட்ட 50 சதவீத மின் நுகா்வைக் கொண்டுள்ளன. இது காா்பன் உமிழ்வு மற்றும் கிரிட் அழுத்தத்தை கணிசமாகப் பாதிக்கிறது. ஏ.சி. மற்றும் மின் விசிறிகளின் பயன்பாடு அதிகரிப்பது உச்சபட்ச மாதங்களில் மின்சார கட்டணங்களை கணிசமாக பாதிக்கலாம்.

ஆனால், ஏ.சி. தொ்மோஸ்டாட் அமைப்பை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது போன்ற எளிய நடவடிக்கைகள் மின்சார பயன்பாட்டை கிட்டத்தட்ட 6 சதவீதம் குறைக்க முடியும். ஏ.சி. தொ்மோஸ்டாட்டை 24 டிகிரி செல்சியஸில் அமைப்பதன் மூலம் வசதி, செலவு செயல்திறனின் சரியான சமநிலையை வழங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க