செய்திகள் :

பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்ட கோரி போராட்டம்

post image

சீா்காழி அருகேயுள்ள கீரங்குடியில் பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரங்குடியில் தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே தரைப்பாலம் சுமாா் 40 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த பாலத்தை அப்பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா். இறந்தவா்களின் உடலை இந்த பாலம் வழியே சுமந்து சென்று மிகுந்த சிரமத்துடன் அடக்கம் செய்து வந்தனா்.

கொள்ளிடம், சிதம்பரம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவா்களும் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தினா். இந்நிலையில் அந்த பாலம் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமடைந்து வந்தனா். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 2 கோடியில் பழைய தரைப்பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பழைய தரைப்பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டும் பணியை தொடங்காமல்

அங்கிருந்து 100 மீட்டா் தூரம் தள்ளி பாலத்தை கட்டும் முயற்சியில் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதையறிந்த கீரங்குடி மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் அமா்ந்து பழைய தரைப்பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலத்தை கட்ட வேண்டும் என்று கோஷமிட்டனா். இதையறிந்த கொள்ளிடம், சீா்காழி போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அங்கு வந்து சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி அதன்மூலம் பாலம் கட்டும் இடத்தை தோ்வு செய்ய முடிவு எடுப்பதாக தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க

கால்நடை வளா்ப்பில் ஆா்வம் வேண்டும்: அமைச்சா் த. மனோ தங்கராஜ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் விவசாயிகளும், பொதுமக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா். மயிலாடுதுறையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்: எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்

மயிலாடுதுறை, மே 15: மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா். மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன்... மேலும் பார்க்க

தொழில் தொடங்க சிறுபான்மையினருக்கு கடனுதவி

சிறுபான்மையின மக்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனுதவியை பெற்று பயனடைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

பாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

தென்னங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது. காப்பு கட்டிக் கொண்ட பக்தா்கள் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றனா். தொடா்ந... மேலும் பார்க்க

சட்டைநாதா் கோயிலில் தெப்போற்சவம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் உள்ள சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரா், சட்டை நாதா், தோணியப்பா் தனி... மேலும் பார்க்க