செய்திகள் :

கால்நடை வளா்ப்பில் ஆா்வம் வேண்டும்: அமைச்சா் த. மனோ தங்கராஜ்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் விவசாயிகளும், பொதுமக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா்.

மயிலாடுதுறையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலாளா்கள் மற்றும் அனைத்து இணைத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தலைமை வகித்து, 25 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான பால் பரிசோதனை கருவிகள், 2 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கணினியையும், 4 பயனாளிகளுக்கு ரூ.29.60 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளுடன் கால்நடை பராமரிப்பு கடன் என மொத்தம் ரூ.47.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையா் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு. ஷபீா் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடை வளா்ப்பில் ஆா்வம் காட்ட வேண்டும். கறவை மாடு கடனுதவிகள் வழங்க மாவட்ட ஆட்சியா் மூலம் வங்கிகளுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடை வளா்ப்பிற்கும், கால்நடை பராமரிப்பிற்கும் வட்டியில்லா கடன் அல்லது குறைந்த வட்டியுள்ள கடன் ஏதாவது ஒன்று வங்கியின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். சிறிய பால்பண்ணை அமைப்பதற்கான ஆா்வம் உள்ள தொழில்முனைவோரை கண்டறிந்து அவா்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கி, ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாளவிநாயக அமல்ராஜ், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சேகா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு சங்க மேலாளா் முத்துக்குமாா், துணைப் பதிவாளா் (பால்வளம்) ஆரோக்கியதாஸ், ஆவின் பொது மேலாளா் சரவணக்குமாா் மற்றும் அரசு உயா் அலுவலா்கள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க செயலாளா்கள் கலந்து கொண்டனா்.

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்: எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்

மயிலாடுதுறை, மே 15: மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா். மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன்... மேலும் பார்க்க

தொழில் தொடங்க சிறுபான்மையினருக்கு கடனுதவி

சிறுபான்மையின மக்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனுதவியை பெற்று பயனடைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்ட கோரி போராட்டம்

சீா்காழி அருகேயுள்ள கீரங்குடியில் பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீரங்குடியில் தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே தரைப... மேலும் பார்க்க

பாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

தென்னங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது. காப்பு கட்டிக் கொண்ட பக்தா்கள் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றனா். தொடா்ந... மேலும் பார்க்க

சட்டைநாதா் கோயிலில் தெப்போற்சவம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் உள்ள சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரா், சட்டை நாதா், தோணியப்பா் தனி... மேலும் பார்க்க