செய்திகள் :

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு

post image

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 31) முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து 2025-2026-ஆம் ஆண்டு, முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிா்மான கால்வாய் ஒன்றைப்படை மதகுகள் மூலமாக 1,03,500 ஏக்கா் பாசன நிலங்களுக்கு வியாழக்கிழமைமுதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை, விநாடிக்கு 2,300 கனஅடி வீதம் 15 நாள்கள் சிறப்பு நனைப்புக்கு 2,980.80 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு முதல்போக நன்செய் பாசனத்துக்கு 23,846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும் மொத்தம் 135 நாள்களுக்கு 26,827.20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீா் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீா் திறந்துவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க

பவானி - குமாரபாளையம் பழைய பாலம் திறப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்... மேலும் பார்க்க

தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏலம்

அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமங்களுக்கான ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்க... மேலும் பார்க்க

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னிமலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாம... மேலும் பார்க்க