செய்திகள் :

பஹல்காம்: காங்கிரஸின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கோரிக்கைக்கு பவார் ஆதரவு!

post image

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை  தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரித்துள்ளார்.

தாணேவில் நிகழ்ந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பிறகு சரத் பவார் செய்தியாளர்களுடன் பேசினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதை நாட்டின் மீதான தாக்குதல் என்றே கருதப்படுகிறது. இந்தப் பிரச்னையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றமும் ஒன்றுபட்டுள்ளன.

இந்தச் செய்தியை உலகிற்கு அனுப்ப, பஹல்காம் பற்றிய ஒரு சிறப்பு அமர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று பவார் கூறினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்கவும், கூட்டுத் தீர்மானத்தை வெளிப்படுத்தவும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஏப்ரல் 22 அன்று தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரமான பஹல்காம் அருகேயுள்ள புல்வெளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவார்.

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ... மேலும் பார்க்க

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி!

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்வார் மாவட்டத்திலுள்ள பையிண்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்... மேலும் பார்க்க