பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு வரவேற்பு
பரமத்தி வேலூா் படமுடிபாளையத்தில் பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணிபுரிந்த பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த பாதுகாப்பு படை வீரருக்கு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சோ்ந்தவா் பாலசுப்ரமணியம் (55). இவா் எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜோதிமணி (49).
இவா்களுக்கு ஹரிஹரன்( 23) என்ற ஒரு மகன் உள்ளாா். பஹல்காம் தாக்குதலின் போது எல்லைடயில் பணிபுரிந்த பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை பரமத்தி வேலூா் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறையில் வந்திருந்தாா்.
இதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், அவரது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் பாலசுப்ரமணியத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். பாலசுப்பிரமணியம் பணியில் சோ்ந்து 35 வருடம் நிறைவடைந்ததையொட்டி ஏழை, எளிய மக்களுக்கும் உணவு பொட்டலங்களை வழங்கினாா்.