செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!

post image

உத்தரப் பிரதேசத்தில் கோயில் கட்டுமானப் பணியில் இருந்த முஸ்லிம்களை கோயில் நிர்வாகத்தினர் பணிநீக்கம் செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உள்ள இந்து கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் தடுக்கப்பட்டு, அவர்களை ஜனநாயக மனித உரிமைகள் சங்கத்தினர் பணிநீக்கம் செய்தனர்.

மேலும், இனிவரும் காலங்களில் கோயில் பணிகளில் முஸ்லிம் சமூகத்தினர் ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்தத் தாக்குதல், உலகளவில் கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியாவும், இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன.

இதையும் படிக்க:இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: இந்தியா அறிவிக்கை வெளியீடு

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தாா், ஜோா்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன. ஜம்மு-காஷ்மீா், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா... மேலும் பார்க்க

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவளித்ததாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந... மேலும் பார்க்க

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த நபரின் உடலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீா்... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் முடிவு: நிபுணா்கள் கருத்து

‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும்’ என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து அணைகள், ஆறுகள் மற்றும் மக்க... மேலும் பார்க்க